இந்திய ராணுவம் மீது கொடூர தாக்குதல் நடத்த முயற்சி; பாகிஸ்தானிய படையினரின் ஊடுருவல் முறியடிப்பு
இந்திய எல்லையில் கொடூர தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
நவ்காம்,
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்காம் பிரிவில் பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினர் தாக்குதல் நடத்தும் நோக்குடன் ஊருடுவ முயன்றுள்ளனர்.
அவர்கள் அடர்ந்த காட்டு பகுதி வழியே உயர்ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களுடன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வர முயன்றனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வழக்கம்போல் வருபவர்கள் போன்று ஆடையணிந்து இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் அந்நாட்டின் அடையாளங்கள் இருந்தன.
சிலர் எல்லை பாதுகாப்பு படையினர் போன்றும் மற்றும் உளவு அமைப்பினர் போன்றும் உடை அணிந்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர்.
இதனால் இந்திய எல்லையில் தாக்குதலுக்காக ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இவர்களின் உடல்களை திரும்ப எடுத்து கொள்ளும்படி பாகிஸ்தானிடம் கேட்டு கொள்வோம் என்று இந்திய ராணுவ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story