ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்


ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்
x
தினத்தந்தி 31 Dec 2018 3:24 PM GMT (Updated: 31 Dec 2018 3:24 PM GMT)

ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மை ஆகிவிடாது என நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.


புதுடெல்லி, 


பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தை எழுப்பினார். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புக்கொண்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு விமானம் வாங்கப்படுவதாகவும், இதில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்கு உடனடியாக பதில் கூறிய  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘‘ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மை ஆகிவிடாது. இந்த ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், நீங்கள் ஏன் விலகி ஓடுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை‘‘ என்றார். 

Next Story