விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி; எங்களுக்கு உணவு அளிப்பவர்கள்: பிரதமர் மோடி பேச்சு


விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி; எங்களுக்கு உணவு அளிப்பவர்கள்:  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2019 7:31 AM GMT (Updated: 5 Jan 2019 7:31 AM GMT)

விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கியாக உள்ளனர். ஆனால் எங்களுக்கு உணவு அளிப்பவர்களாக உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பலாமு,

ஜார்க்கண்டின் பலாமு நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கியாக உள்ளனர்.  ஆனால் எங்களுக்கு உணவு அளிப்பவர்களாக உள்ளனர்.  இதுவே காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் உள்ள வேறுபாடு என பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நாங்கள் நரேந்திர மோடி ஆவாஸ் யோஜனா என்று திட்டம் கொண்டு வரவில்லை.  நமோ ஆவாஸ் யோஜனா எனவோ, ரகுபர் தாஸ் ஆவாஸ் யோஜனா எனவோ திட்டம் கொண்டு வரவில்லை.

நாங்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்று திட்டம் கொண்டு வந்துள்ளோம்.  இதனால் அடுத்து வரும் பிரதமரும் வருங்காலத்தில் இந்த திட்டத்தினை முன்னெடுத்து கொண்டு செல்ல முடியும் என பேசியுள்ளார்.

Next Story