டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்
டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமானங்கள் தாமதம் ஆனது.
புதுடெல்லி,
மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று விமான புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஆனது. அதேபோல், பெங்களூருவிலும் கிட்டத்தட்ட 20 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. போபாலில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. டெல்லி நோக்கி வந்த 13 ரயில்கள் தாமதமாக வருகின்றன.
முன்னதாக, நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் ஏறத்தாழ 50 விமானங்கள் தாமதமானது.
Related Tags :
Next Story