பாஜக முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை


பாஜக முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 8 Jan 2019 5:06 AM GMT (Updated: 8 Jan 2019 5:47 AM GMT)

ரெயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அகமதாபாத்

குஜராத் மாநிலம் அபடசா தொகுதியைச் சேர்ந்த   பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ  ஜெயந்திலால் பனுசாலி. இவர் நேற்று  சாய்ஜி  நகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பில்  புஜியில் இருந்து அகமதாபாத் பயணம் செய்தார்.

அவர் சென்ற ரெயில்  கட்டாரியா மற்றும் சுர்பாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது பனுசாலி பயணம் செய்த  முதல் வகுப்பு பெட்டிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  பனுசாலியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பனுசாலியின் தலை மற்றும் கண் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பனுசாலி உயிரிழந்தார்.

ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக  ரெயிலை நிறுத்தினர். இது குறித்து மாலியா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தற்போது மாலியா  மருத்துவமனையில் பனுசாலி உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Next Story