விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி


விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 9 Jan 2019 1:07 PM GMT (Updated: 9 Jan 2019 1:07 PM GMT)

விவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜெய்பூர்,

2018 கடைசியில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. விவசாயிகள் பிரச்சனை பா.ஜனதாவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, “சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் தங்களுடைய பலத்தை காட்டிவிட்டனர். 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் பிரச்சனையை சரி செய்ய விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மிகவும் சிறிய நடவடிக்கையாகும். பிரச்சனைகளை தீர்க்க புதிய பசுமை புரட்சி அவசியமானது” என்றார். 

Next Story