காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா


காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா
x
தினத்தந்தி 10 Jan 2019 4:08 AM GMT (Updated: 10 Jan 2019 6:03 AM GMT)

காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷா பைசல் (வயது 35). 2009-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். மாநில அளவில், ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய ஷா பைசல்  தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவமும் படித்துள்ள  இவர், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில்  கூறியிருப்பதாவது:- “காஷ்மீரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்துவருகிறது. அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மக்களின் நலன் கருதி, ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மேலும் விளக்கம் அளிக்க உள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஷா பைசலின் இந்த முடிவை ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் பாரமுல்லா தொகுதியில் பைசல் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. 


Next Story