மேகதாது அணை விவகாரம்: அணை கட்டும் பணியை தொடங்குவோம் - வாட்டாள் நாகராஜ்


மேகதாது அணை விவகாரம்: அணை கட்டும் பணியை தொடங்குவோம் - வாட்டாள் நாகராஜ்
x
தினத்தந்தி 10 Jan 2019 1:49 PM GMT (Updated: 10 Jan 2019 1:49 PM GMT)

சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றை கொண்டு மேகதாதுவில் நாங்களே அணை கட்ட துவங்குவோம் என்று கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ்,

மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வருகிற 12 ஆம் தேதி,  கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 

மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்காவிட்டால், தங்களது இயக்கத்தின் சார்பில் சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றை கொண்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம் என்று கூறினார்.

Next Story