சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jan 2019 6:52 PM GMT (Updated: 11 Jan 2019 6:52 PM GMT)

சி.பி.ஐ.யை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா நீக்கம் குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

சி.பி.ஐ.யை திரும்ப திரும்ப பா.ஜனதா தவறாக பயன்படுத்தி வருகிறது. தனது அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செய்கிறது. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பா.ஜனதா சீரழித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story