பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்


பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 % இடஒதுக்கீடு; மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Jan 2019 1:28 PM GMT (Updated: 12 Jan 2019 1:28 PM GMT)

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கடந்த 8ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்நிலையில் பொது பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 9ந்தேதி மாநிலங்களவையில் 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.  நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், மத்திய மந்திரிசபை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.

Next Story