காஷ்மீர்: ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்கி இருந்து வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் இருந்த வயர்லெஸ் ஆபரேடரான அபிஷேக் ராய் குமார் என்ற வீரர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உடனே இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் முகாமுக்கு விரைந்து வந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அபிஷேக் ராய் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்கி இருந்து வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் இருந்த வயர்லெஸ் ஆபரேடரான அபிஷேக் ராய் குமார் என்ற வீரர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உடனே இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் முகாமுக்கு விரைந்து வந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அபிஷேக் ராய் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story