பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை


பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 12 Jan 2019 8:00 PM GMT (Updated: 12 Jan 2019 7:17 PM GMT)

பொங்கல் விழாவையொட்டி, கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கேரள மக்களின் கலாசாரம் பாரம்பரியத்துடன் இணைந்து வாழும் தமிழின மக்கள் கேரளாவில் ஓணம் உள்பட அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்த மாவட்டங்களுக்கு பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, பத்தனம்திட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story