தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி


தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Jan 2019 8:24 AM GMT (Updated: 14 Jan 2019 9:57 AM GMT)

தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள் என தமிழில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் வணக்கம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதே பொங்கல் வாழ்த்துப் பதிவை ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்தியில் மகரசங்கராந்தி வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story