பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 14 Jan 2019 11:27 PM GMT (Updated: 14 Jan 2019 11:27 PM GMT)

கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விதமாக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணங்களை தொடங்கி உள்ளார். அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கேரளாவின் கொல்லத்தில் ரூ.352 கோடி மதிப்பில் 13 கி.மீ. தூர புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இந்த சாலையை திறந்துவைக்கிறார். கொல்லத்துக்கு பிரதமர் மோடி வருவது இது 3–வது முறையாகும்.

மேலும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கும் செல்லும் பிரதமர், அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கும் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு வசதிகளை அவர் தொடங்கி வைப்பார் என தெரிகிறது.

இதைப்போல ஒடிசாவிலும் அவர் புதிய ரெயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.


Next Story