ஒடிசா: அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை திட்டம் - நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை திட்டத்தினை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.
புவனேஸ்வரம்,
ஒடிசா மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை அளிக்கும் ‘சுனேத்ரா’ என்ற திட்டத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். ரூ.680 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, ஆண்டுதோறும் பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.
பொருளாதார அளவுகோல் இன்றி, அனைத்து வயதினருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நவீன் பட்நாயக் கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை அளிக்கும் ‘சுனேத்ரா’ என்ற திட்டத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். ரூ.680 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, ஆண்டுதோறும் பள்ளிகளில் கண் பரிசோதனை செய்யப்படும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.
பொருளாதார அளவுகோல் இன்றி, அனைத்து வயதினருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நவீன் பட்நாயக் கூறினார்.
Related Tags :
Next Story