ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு : தேசிய புலனாய்வு அமைப்பு 7 இடங்களில் சோதனை


ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு : தேசிய புலனாய்வு அமைப்பு 7 இடங்களில் சோதனை
x
தினத்தந்தி 17 Jan 2019 5:35 AM GMT (Updated: 17 Jan 2019 5:35 AM GMT)

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு 7 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இயக்கம் இயங்குவதாக கூறி  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் ஏழு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

ஐஎஸ் அமைப்புக்கு உதவி வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு  ஐஜி அலோக் மிட்டல் கூறி உள்ளார்.

கடந்த டிசம்பர் 26-ந் தேதி டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய இடங்கள், நெரிசலான இடங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு  தெரிவித்து இருந்தது.

Next Story