பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு


பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
x
தினத்தந்தி 18 Jan 2019 9:54 PM GMT (Updated: 18 Jan 2019 9:54 PM GMT)

ஏழைகள் பயன் அடையும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் என்ற பெயரில் காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தி 100 நாட்கள் நிறைவடைந்து உள்ளது.

புதுடெல்லி,

‘ஆயுஷ்மான் பாரத்’  திட்டம் மூலம் இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். இந்த திட்டத்தை அ றிமுகப்படுத்திய மோடிக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘காப்பீடு திட்டம் மூலம் சாதனை படைத்துள்ள அரசை பாராட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து பில்கேட்சுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘திட்டம் தொடங்கிய 100 நாட்களில் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் ஏராளமானோர் பயன்அடைவார்கள். பில்கேட்சின் பாராட்டுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story