2019-ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, 52-வது மற்றும் 2019-ம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை 1800-11-7800 என்ற எண்ணிலும், NaMo App மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
The first #MannKiBaat of 2019 will take place on the 27th of this month. Share your ideas and suggestions for it.
— Narendra Modi (@narendramodi) January 19, 2019
Dial 1800-11-7800 and record your message. You can also share inputs on the MyGov Open Forum or the NaMo App. https://t.co/uVMtqj7GBj
Related Tags :
Next Story