2019-ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி


2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத்  நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Jan 2019 10:09 AM GMT (Updated: 19 Jan 2019 10:09 AM GMT)

2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, 52-வது மற்றும் 2019-ம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை 1800-11-7800 என்ற எண்ணிலும்,  NaMo App மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story