ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் -பிரதமர் மோடி


ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Jan 2019 12:15 PM GMT (Updated: 19 Jan 2019 12:15 PM GMT)

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹேவேலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள் பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை தடுத்ததால் எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது.

கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதி பங்கீட்டுக்கு பேரம் பேசுகின்றனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் கோபமடைந்து எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட மாநாடு என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story