ஜனவரி 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்
ஜனவரி 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷா (வயது 54), நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டார்.
அவர் கடந்த 16-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தொடர்சிகிச்சை அளித்து வந்தனர். இதில் அவர் குணம் அடைந்தார். இதையடுத்து அவர் நேற்று காலை 10.20 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் ஜனவரி 22-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story