ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2019 7:50 AM GMT (Updated: 21 Jan 2019 7:50 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி இன்னும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story