குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது
குடும்பத்தினரை காக்க குழந்தையை உயிருடன் குழியில் புதைத்ததற்காக சூனியக்காரர், தந்தை கைது செய்யப்பட்டனர்.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புரைனா கிராம பகுதி அருகே குழி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் சந்தேகத்தின்பேரில் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பின் உடனடியாக குழிக்குள் இருந்த ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர்.
இதனை தொடர்ந்து குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இதுபற்றி குழந்தையின் தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவரது உறவினர் ஒருவர் குழந்தையை சூனியக்காரர் ஒருவரிடம் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அந்த சூனியக்காரர், குடும்பத்தில் மற்றவர்களுக்கு எதுவும் நேர்ந்து விடாமல் காத்து கொள்ளும் வகையில் குழந்தையை குழிக்குள் புதைத்து விடவும் என அறிவுரை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை, சூனியக்காரர் மற்றும் குழந்தையின் அத்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story