அவதூறு கட்டுரை; ஜெய்ராம் ரமேஷ் மீது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் வழக்கு பதிவு


அவதூறு கட்டுரை; ஜெய்ராம் ரமேஷ் மீது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 21 Jan 2019 1:12 PM GMT (Updated: 21 Jan 2019 1:12 PM GMT)

அவதூறு கட்டுரை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மீது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருபவர் அஜித் தோவல்.  இவரது மகன் விவேக் தோவல்.  இவரை பற்றி கேரவன் என்ற பத்திரிகையில் அவதூறாக கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கட்டுரையில், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை விவேக் பயன்படுத்தி வருகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த பத்திரிகை நிறுவனம், கட்டுரை எழுதியவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மீது குற்ற அவதூறு வழக்கு ஒன்றை விவேக் பதிவு செய்துள்ளார்.  இந்த வழக்கில் ரமேஷ் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.  இந்த வழக்கை பற்றி கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி சமர் விஷால் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

Next Story