வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி
தனது இளமை காலம் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
பேஸ்புக்கின் பிரபல பக்கமான Humans of Bombay உடன் பிரதமர் மோடி தனது இளமைகால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இளம்வயதில் இமயமலைக்கு புனித பயணம் மேற்கொண்டதாக தெரிவித்த மோடி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து திரும்பியவுடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாக கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் 5 நாட்கள் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருப்பேன் என்றும், அங்குள்ள சுத்தமான தண்ணீர், மக்கள் யாரும் இல்லாத அமைதியான சூழல் மனதுக்கு இதம் அளிப்பவையாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.
வனப்பகுதியில் இருக்கும்போது வானொலி, செய்தித்தாள், இணையதளம் போன்றவற்றை பயன்படுத்துவது கிடையாது என கூறிய மோடி, 5 நாட்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து சென்றுவிடுவேன் என்றார். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தங்கியிருந்தபோது டீ, உணவு தயாரிப்பது, அலுவலகத்தை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை செய்ததாக மோடி நினைவு கூர்ந்தார்.
Related Tags :
Next Story