தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்


தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 24 Jan 2019 7:35 AM GMT (Updated: 24 Jan 2019 7:35 AM GMT)

தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சதிகள், சூழ்ச்சிகள் செய்தாலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது.  தமிழக சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முழுமையாக வெற்றி பெறும். இடைத்தேர்தல்களிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.

மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான், வேறு எந்த கட்சியும் இல்லை.

மேகதாது திட்டம் தொடர்பாக எந்த ஒப்புதலும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துள்ள நிலையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அறிக்கை கொடுத்தது சட்ட விரோதம்.

யாரோடு யார் கூட்டணி என்பது உரிய தருணத்தில் தெரிவிப்போம். கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் யாருடன் கூட்டணி என்பதை கட்சித்தலைமை முடிவு செய்யும். 

மத்தியிலோ, அண்டை மாநிலங்களிலோ, எந்த அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம் என கூறியுள்ளார்.

Next Story