"மக்கள் நலனை கருத்தில்கொண்டு வெளியான பட்ஜெட்" - நிர்மலா சீதாராமன்


மக்கள் நலனை கருத்தில்கொண்டு வெளியான பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 Feb 2019 12:29 PM GMT (Updated: 2 Feb 2019 12:29 PM GMT)

மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், 

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக பேச எனக்கு உரிமை இல்லை. மக்களை மனதில் வைத்து தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story