காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் சாவு


காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் சாவு
x
தினத்தந்தி 2 Feb 2019 7:39 PM GMT (Updated: 2 Feb 2019 7:39 PM GMT)

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பல பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அகற்றும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அந்தவகையில் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட பகல்காம்-ஆறு சாலையில் கொட்டிக் கிடந்த பனித்துகள்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான எந்திரம் ஒன்றில் 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.பல டன் எடை கொண்ட பனிக்கட்டிகள் அந்த எந்திரம் மீது விழுந்து அழுத்தின. இதில் பனிக்கட்டிகளுக்கு அடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Next Story