முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு


முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
x
தினத்தந்தி 4 Feb 2019 7:37 AM GMT (Updated: 4 Feb 2019 9:34 AM GMT)

முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்பிடிப்புப் பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்காக முல்லைப் பெரியாறு அணையின் அருகில் நீர் பிடிப்பான பகுதியில் தமிழகத்துக்கு சொந்தமான நிலத்தில் மெகா கார் பார்க்கிங்கை கட்ட கேரள அரசின் வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

கேரளாவின் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2014–ம் ஆண்டில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இரு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து சுமூகமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று  கூறி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில், முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  ஏற்கனவே உள்ள கட்டிடங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தமிழக அரசு கோரி உள்ளது.

Next Story