3 நாட்களாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நிறைவு


3 நாட்களாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நிறைவு
x
தினத்தந்தி 5 Feb 2019 1:08 PM GMT (Updated: 5 Feb 2019 1:08 PM GMT)

3 நாட்களாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். 

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து 3வது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இன்றும் நீடித்தது.  அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய கூடாது என்றும் கட்டாய வாக்குமூலம் பெற கூடாது என்றும் தெரிவித்தது.

இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மம்தா கூறினார்.  இந்த நிலையில், 3 நாட்களாக மேற்கொண்ட தனது தர்ணா போராட்டத்தினை மம்தா இன்று நிறைவு செய்துள்ளார்.

Next Story