ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவு


ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 5 Feb 2019 5:55 PM GMT (Updated: 5 Feb 2019 5:55 PM GMT)

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. #Jammu&Kashmir #Earthquake

ஸ்ரீநகர்/சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தில் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவானது.
 
இந்த நிலநடுக்கம் இன்று இரவு 10.17 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக இமாசல பிரதேச மாநிலம் சம்பா என்ற இடத்தில் இன்று பிற்பகல் 3.51 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. இதையடுத்து சில மணி நேரங்களில் மாண்டி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியது.

சம்பா மாவட்டத்தை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

Next Story