நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் பெரும் தீ விபத்து; 35 நோயாளிகள் மீட்பு


நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் பெரும் தீ விபத்து; 35 நோயாளிகள் மீட்பு
x
தினத்தந்தி 7 Feb 2019 9:13 AM GMT (Updated: 7 Feb 2019 9:13 AM GMT)

நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 35 நோயாளிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

நொய்டா,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பல அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் மெட்ரோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் இருதய அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இங்கு உள்ள செக்டார் 12ல் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றன.  அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு 35 நோயாளிகளை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதனை தொடர்ந்து கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.  கட்டிடத்தின் வராண்டா மற்றும் பால்கனியில் நின்றிருந்த மக்களை மீட்பதற்காக கண்ணாடி ஜன்னல்களை உடைத்து கொண்டு மீட்பு பணியாளர்கள் சென்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Next Story