தந்தையை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்
பீகாரில் தந்தையை மரத்தில் கட்டிவைத்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் கிஷான்காஞ் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் செவ்வாய்கிழமை இரவு பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் இரவு 19 வயது இளம்பெண்ணின் வீட்டு கதவை தட்டியுள்ளது. தண்ணீர் கேட்டதும் இளம்பெண் கொடுத்துள்ளார். அப்போது அக்கும்பல் பெண்ணை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
பெண்ணின் தந்தையை மரத்தில் கட்டிவைத்துவிட்டு அவருடைய கண் முன்னே இந்த கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கொடூரக் கும்பல் போலீசுக்கு செல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story