கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை மோடி தொடங்கினார்: ‘மணமகன், மணமகள் வராமல் மேள தாளம் அடித்திருக்கிறார்கள்’ - மம்தா பானர்ஜி கிண்டல்


கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை மோடி தொடங்கினார்: ‘மணமகன், மணமகள் வராமல் மேள தாளம் அடித்திருக்கிறார்கள்’ - மம்தா பானர்ஜி கிண்டல்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:15 PM GMT (Updated: 8 Feb 2019 10:02 PM GMT)

கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை மோடி தொடங்கி வைத்தார். இதனை ’மணமகன், மணமகள் வராமல் மேள தாளம் அடித்திருக்கிறார்கள்’ என மம்தா பானர்ஜி கிண்டலாக கூறினார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தின் வட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சூராபந்தர் நகரில் கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கிண்டல் அடித்தார்.

அப்போது அவர், “ஐகோர்ட்டு கிளையை பிரதமர் தொடங்கி வைப்பது பற்றி மாநில அரசுக்கோ, ஐகோர்ட்டுக்கோ மத்திய அரசு தகவல் தெரிவிக்கவில்லை. மணமகன் வரவில்லை. மணமகள் வரவில்லை. ஆனால் வாத்தியக்குழுவினர் மேள தாளம் அடித்துவிட்டு போய் விட்டார்கள்” என குறிப்பிட்டார்.


Next Story