பெண் வயிற்றில் கத்தரிக்கோல்; அறுவை சிகிச்சையில் தவறு செய்த மருத்துவர்கள்


பெண் வயிற்றில் கத்தரிக்கோல்; அறுவை சிகிச்சையில் தவறு செய்த மருத்துவர்கள்
x
தினத்தந்தி 9 Feb 2019 2:52 PM GMT (Updated: 9 Feb 2019 2:52 PM GMT)

தெலுங்கானா அரசு மருத்துவமனையில் மனைவி வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து மருத்துவர்கள் தைத்து விட்டனர் என கணவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த வருடம் நவம்பரில் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.  இதன்பின் வீடு திரும்பிய அவர் தனக்கு வயிறு வலிக்கிறது என கணவரிடம் கூறி வந்துள்ளார்.

தொடர்ந்து வலி ஏற்பட்ட நிலையில் அவரது வயிற்றில் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.  இதில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதற்கான கத்தரிக்கோல் இருந்துள்ளது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் மருத்துவ குழுவினரின் மீது புகார் அளித்து உள்ளார்.  தனிநபர் பாதுகாப்பு அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தீங்கு விளைவிக்கும் செயலை அவர்கள் செய்துள்ளனர் என்ற புகாரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story