பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ.


பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 11 Feb 2019 10:40 AM GMT (Updated: 11 Feb 2019 10:40 AM GMT)

தனக்கு நோட்டீஸ் அனுப்பிய பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என எம்எல்ஏ ஒருவர் திட்டி உள்ளார்.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ் (30). இப்பகுதியின் முதல் பெண் சப்-கலெக்டர் இவர். கோர்ட் உத்தரவை மீறி தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது குறித்து ரேணு ராஜூடன் பொதுமக்கள் முன்னிலையில் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசிய ராஜேந்திரன், அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை. கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்து தான். இவர் இல்லை. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்றார்.

எம்எல்ஏவின் இந்த கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரேணு ராஜ், கோர்ட் உத்தரவின்படியே நான் நடவடிக்கை எடுத்தேன். அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவது கோர்ட் அவமதிப்பு. இது தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி விட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலையில்லை என்றார்.

Next Story