ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா


ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா
x
தினத்தந்தி 12 Feb 2019 11:13 AM GMT (Updated: 12 Feb 2019 11:13 AM GMT)

ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் என அமித்ஷா பேசியுள்ளார்.

கோத்ரா,

2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரியங்கா காந்தியும் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். லக்னோவில் அவருடைய பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்தனர். பிரியங்காவின் அரசியல் வருகை குடும்ப ஆட்சியை உறுதி செய்கிறது என காங்கிரஸை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் கோத்ராவில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப்பற்றி நினைக்க முடியுமா? காங்கிரஸ் கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் ஆகவில்லை, எனவே பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார். 

Next Story