75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு


75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Feb 2019 1:22 PM GMT (Updated: 12 Feb 2019 1:22 PM GMT)

75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு டெல்லியில் அவரிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணையை நடத்தியது. இதற்கிடையே ராஜஸ்தான் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். 

இவ்வழக்கு விசாரணையில் வதேரா மட்டுமட்டுமின்றி அவரது தயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நில விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேராவும், மவுரினும் ஆஜரானர்கள்.  முன்னதாக பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில்,
75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம் சாட்டியிருந்தார். 

ராபர்ட் வதேரா வெளியிட்ட செய்தியில்,  கடந்த 4 1/2 ஆண்டுகளாக எதும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள நிலையில்  என்னை விசாரணைக்கு அழைப்பது அரசியல் மட்டும்தான். இது பா.ஜனதாவின்  தேர்தல் வித்தை என மக்கள் நினைக்க மாட்டார்களா? இதில் என்னை மட்டுமல்லாது, 75 வயதாகும் எனது தாயை விசாரணைக்காக அழைத்திருப்பது அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது. மூத்த குடிமக்களை இவ்வாறு அலைக்கழிப்பது என்ன நியாயம்? என கேள்வியை எழுப்பியுள்ளார். மகளை இழந்த என்னுடைய தாயை என்னுடன் தங்கியிருக்குமாறு கூறினேன். அதற்காக அவர் விசாரணை என்ற பெயரில் கொடுமையை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் ராபர்ட் வதேரா.

Next Story