அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அந்தமான் தீவுகளில் நள்ளிரவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்தமான் தீவுகள் பகுதியில் நள்ளிரவு 1.51 மணி அளவில் நில நடுக்கம் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.5 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் அந்தமான் தீவுகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழிப்பேரலை தொடர்பாகவும் எதுவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Earthquake of Magnitude:4.5, Occurred on:13-02-2019, 01:51:30 IST, Lat:13.9 N & Long: 91.4 E, Depth: 10 Km, Region:Andaman Islands Region pic.twitter.com/6zwWyfE7DC
— India Met. Dept. (@Indiametdept) February 12, 2019
Related Tags :
Next Story