தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: கட்சியினரிடம் 16 மணி நேரம் கருத்துக்களை கேட்ட பிரியங்கா காந்தி


தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: கட்சியினரிடம் 16 மணி நேரம் கருத்துக்களை கேட்ட பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 13 Feb 2019 6:13 AM GMT (Updated: 13 Feb 2019 6:13 AM GMT)

தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரிடம் விடிய விடிய கருத்துக்களை பிரியங்கா காந்தி கேட்டார்.

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம்,  மிகப்பெரிய பேரணியுடன் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தனது தேர்தல் பணிகளை தொடங்கினார்.

தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை உத்தர பிரதேசத்தில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். நாளை வரை இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 16 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது. நேற்று மதியம் 1.30 மணிக்கு  தொடங்கிய கூட்டம்,  இன்று காலை 5.30 மணி வரை நடந்தது. விடிய விடிய நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மொத்தமாக 8 தொகுதிகளில் இருந்து நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி பேசினார்.  ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10 நிர்வாகிகளை சந்தித்து இவர் பேசினார். இவற்றில் ரேபரலி, அமேதி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளும் அடங்கும். 

இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி, "காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்து இந்த சந்திப்பு மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கருத்துக்களை நான் கேட்டறிந்தேன்" என்றார். 

Next Story