காஷ்மீரில் பள்ளியில் வெடி விபத்து; 16 மாணவர்கள் காயம்
காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த வெடி விபத்தில், 16 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நர்பால் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று குளிர்கால பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பள்ளியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நர்பால் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று குளிர்கால பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பள்ளியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story