மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி


மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
x

உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் எஸ்.எஸ்.அலுவாலியா. மேற்கு வங்காளத்தில் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவருக்கு குளிர் காரணமாக மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறியும் தென்பட்டது. இது அதிகமானதால் நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அலுவாலியா சேர்க்கப்பட்டார். 

தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story