தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - அருண்ஜெட்லி


தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - அருண்ஜெட்லி
x
தினத்தந்தி 15 Feb 2019 5:54 AM GMT (Updated: 15 Feb 2019 5:54 AM GMT)

தீவிரவாத தாக்குதலால் பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறி உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;:-

பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் கோரிக்கை வைக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா. இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும் என கூறினார்.

Next Story