ராபர்ட் வதேராவுக்கு உடல்நலக்குறைவு - அமலாக்கத்துறை விசாரணை தள்ளிவைப்பு


ராபர்ட் வதேராவுக்கு உடல்நலக்குறைவு - அமலாக்கத்துறை விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 6:00 PM GMT (Updated: 19 Feb 2019 5:36 PM GMT)

ராபர்ட் வதேராவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, அமலாக்கத்துறையின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதாகவும், அதில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் ஏற்கனவே 4 தடவை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

5-வது தடவையாக இன்று அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராவதாக இருந்தது. ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவருடைய வக்கீல் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை, வேறு ஒரு நாளில் விசாரணை நடத்துவதாக தெரிவித்தது.



Next Story