காலிண்டி விரைவு ரெயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு


காலிண்டி விரைவு ரெயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:18 PM GMT (Updated: 20 Feb 2019 4:18 PM GMT)

காலிண்டி விரைவு ரெயிலில் இன்று இரவு சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

புதுடெல்லி,

கான்பூர் நகரில் இருந்து பிவானி நோக்கி செல்லும் காலிண்டி விரைவு ரெயில் பராஜ்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று இரவு 7.10 மணியளவில் வந்து சேர்ந்தது.  

இந்த ரெயிலின் பொது பெட்டியில் இருந்த கழிவறையில் சிறிய அளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.  இந்த பகுதி கான்பூரில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் வெடித்து இருக்க கூடும் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.  தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Next Story