3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்


3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்
x
தினத்தந்தி 21 Feb 2019 9:22 AM GMT (Updated: 21 Feb 2019 9:22 AM GMT)

3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மோடியை குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாரதீய ஜனதா அரசை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

டெல்லியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான  ஹரூன் யூசுப்,   உளவுத்துறை எச்சரிக்கைகளை   கேட்க தவறியதாக மோடி  அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

நரேந்திர மோடி ஜியால் 3 கிலோ மாட்டிறைச்சியை  தேடி கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி உள்ளார்.


Next Story