ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்பு


ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 7:00 AM GMT (Updated: 23 Feb 2019 7:00 AM GMT)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள பந்திப்போரா மாவட்டம் சர்வான் பகுதியில், இன்று அதிகாலை பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பனிச்சரிவில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர்  விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவம், காவல்துறை உள்ளிட்டோரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Next Story