உளவுத்துறை எச்சரித்தும் புல்வாமா தாக்குதல் நடந்தது ஏன்? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி


உளவுத்துறை எச்சரித்தும் புல்வாமா தாக்குதல் நடந்தது ஏன்? -மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி
x
தினத்தந்தி 25 Feb 2019 9:58 AM GMT (Updated: 25 Feb 2019 9:58 AM GMT)

உளவுத்துறை எச்சரித்தும் புல்வாமா தாக்குதல் நடந்தது ஏன்? என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை அளித்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசை மீண்டும் விமர்சனம் செய்துள்ள மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசுகையில், நரேந்திர மோடி - அமித்ஷா சகோதரர்களால் மத்திய அரசு நடத்தப்படுகிறது. முடிவு எடுப்பதில் அமைச்சரவையின் பங்கு இல்லை. உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் புல்வாமா தாக்குதல் நடந்தது ஏன்? நாங்கள் மத்தியில் உள்ள சர்வாதிகார மோடி ஆட்சியை அகற்றுவோம் என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 8-ம் தேதி சிஆர்பிஎப் உயர் அதிகாரிகளுக்கு மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் “பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக நகர்வை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது" என தகவல்கள் வெளியாகியது. மேலும், என்ன வகையான தாக்குதல் நடத்தப்படலாம், இடம் மற்றும் தேதி குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டது. 

ஏற்கனவே விமர்சனம் செய்கையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். பிப்ரவரி 18-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிப்ரவரி 8-ம் தேதி உளவுத்துறையிடம் இருந்து உள்ளீடுகள் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 78 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். என்னுடைய செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது என உளவுத்துறை தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது, இது உங்களுக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார். 

Next Story