பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்


பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்
x
தினத்தந்தி 22 March 2019 3:10 PM GMT (Updated: 22 March 2019 3:10 PM GMT)

பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.


புதுடெல்லி, 


பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பா.ஜனதா தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் என வருமான  வரித்துறையில் சிக்கிய டைரியில் தகவல் உள்ளது என பத்திரிக்கை செய்தி வெளியாகியது. மொத்தம் ரூ. 1,800 கோடி சென்றுள்ளது என குறிப்பிடப்பட்ட செய்தியை மையப்படுத்தி, விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. 

ஆனால் எடியூரப்பா, “இது காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான், போலியானவை” என பதிலளித்துள்ளார்.

பா.ஜனதா தலைமைக்கு கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘‘பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்...’’ என்று சாடியுள்ளார். 

Next Story