ஜம்மு காஷ்மீர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது


ஜம்மு காஷ்மீர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2019 5:24 AM GMT (Updated: 25 March 2019 7:52 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர், 

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநகர் - பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story