பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் கொண்டாடும் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றால், பாகிஸ்தான் தீபாவளியாக கொண்டாடும் என்று குஜராத் முதல்வர் பேசியுள்ளார்.
அகமதாபாத்,
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அதை பாகிஸ்தான் தீபாவளியாக கொண்டாடும் என்று குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் மெக்சனா பகுதியில், பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசிய விஜய் ரூபானி கூறியதாவது:-
“ மக்களவை தேர்தல் முடிவுகளில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டால், பாகிஸ்தான் அதனை தீபாவளியாக கொண்டாடும். ஏனெனில் காங்கிரஸ் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
மே 23 -ல் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். அப்போது தான் பாகிஸ்தானுக்கு அது பயத்தை அளிக்கும்.
காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் குரலாகவே பேசுகின்றனர். காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலுக்காக பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்தது. மோடியும், அமித்ஷாவும் குஜராத்தின் மகன்கள். உலக அரங்கில் இந்தியாவை உச்சிக்கு கொண்டு செல்ல உழைத்து வருகின்றனர்.
மோடியை தோற்கடிக்கவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. மக்கள் தங்களின் ஓட்டுக்கள் மூலம் வரலாறு படைக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story